நல்லாட்சிக்கு நெருக்கடி வரும் போது தாஜுதீன் வருவார் !

TODAYCEYLON
தாஜுதீனை கொலை செய்தது முதலில் யோசித பின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

பொது ஜன பெரமுன கட்சியின் கண்டி சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டி கிளை அங்குரார்பண நிகழ்வில்கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வரும் போது அல்லது தேர்தல் வரும் போது  எங்களது குடும்பத்தின் மீதுஏதாவது வீண் பழியை சுமத்துவார்கள்.

அந்த வகையில் தற்போது தாஜுதீன் களத்துக்கு வந்துள்ளார்.தாஜுதீனை கொலை செய்தது முதலில் யோசிதபின்னர் நாமல் தற்போது ஷிரந்தி என்று கூறுகிறார்கள்.

எனது காலத்தில் பிரதம நீதியரசரை நாம் பாராளுமன்றத்தின் ஆணையுடன் மாற்றுனோம் தற்போது நிலமைதலைகீழாக உள்ளது. 

வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஆளும் கடசியேநம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருகிறது.

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்என விஜேதாச கூறியுள்ளார் என குறிப்பிட்டார்.

6/grid1/Political
To Top