தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பில் 50 வரை­யான முஸ்­லிம் வேட்­பா­ளர்­களுக்கு வாய்ப்பு

NEWS
0 minute read


எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் பட்­டி­ய­லில் சுமார் 50 வரை­யான முஸ்­லிம்­க­ளுக்­கு வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

பல்­வேறு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் 50 க்கும் குறை­யாத முஸ்­லிம் வேட்­பா­ளர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் கள­மி­றங்­க­வுள்­ள­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

வடக்கு மாகா­ணத்­தில் முஸ்­லிம்­க­ளைப் பெரும்­பான்­மை­யா­கக் கொண்ட 32 வட்­டா­ரங்­கள் உள்­ளன. அந்த வட்­டா­ரங்­க­ளில் முஸ்­லிம் வேட்­பா­ளர்­க­ளையே நிறுத்­து­வது என கூட்­ட­மைப்பு முடிவு செய்­துள்­ளது.

யாழ். மாந­கரசபை, வவு­னியா நகரசபை, முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கரைதுறைப்­பற்றுப் பிர­தேசசபை உள்­ளிட்ட பல்­வேறு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் இரட்டை அங்­கத்­த­வர் தொகு­தி­க­ளில் முஸ்­லிம் வேட்­பா­ளர்­கள் நிறுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
To Top