தேங்­காய்க்­கான கட்­டுப்­பாட்டு விலை 75 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

NEWS

தேங்­காய்க்­கான கட்­டுப்­பாட்டு விலை 75 ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அது தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் இவ்­வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். 
கொழும்பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு அவர் கருத்துத் தெரி­விக்­கையில்,
வரட்சி கார­ண­மா­கவே தேங்­காயின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் கிரா­மப்­பு­றங்­களில் தேங்­காய்க்கு பாரி­ய­ளவில் நெருக்­க­டி­யில்லை. எனினும் நக­ரப்­பு­றங்­க­ளி­லேயே அது அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­கி­றது. 
தென்­னந்­தோப்­பு­க­ளுடன் தொடர்­பு­டைய அமைச்­சுகள் மூன்று உள்­ளன. அவற்­றுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தேங்­காயை கொள்­வ­னவு செய்து சதொச ஊடாக 65 ரூபா­வுக்கு விற்­பனை செய்­கிறோம். எனினும் அதற்கு நிலவும் கேள்­வி போது­மா­ன­தாக இல்லை.
எனவே ஜனா­தி­பதி தலை­மையில்  நாளை மாலை (இன்று) வாழ்க்கைச் செல­வு­களை ஆராயும் குழு கூட­வுள்­ளது. அதன்­போது தேங்­காயை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதா இல்லையா என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்­க­வுள்ளோம். 
மேலும் தேங்­காய்க்கு கட்­டுப்­பாட்டு விலையும் நிர்­ண­யிக்­க­வுள்ளோம். அதன்படி கட்டுப்பாட்டு விலை 75 ரூபாவாக அமையவுள்ளது. அதனை வர்த்தமானி மூலம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
6/grid1/Political
To Top