மற்றுமொரு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு?

NEWS


மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவவுள்ளார் தகவல்கள்வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாககூறப்படுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. விரைவில் அவர் ஜனாதிபதியைச் சந்தித்து ஆதரவு தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிறியானி விஜேவிக்கிரம மற்றும்வீரகுமார திசநாயக்க ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குஆதரவு வழங்கி, கட்சி உறுப்பினராக இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
6/grid1/Political
To Top