முப்தி இஸ்மாயில் மென்க் எழுதிய புத்தகத்தை பெற்ற பொதுபலசேனா

NEWS



(அஷ்ரப் ஏ சமத்)

கலாநிதி  முப்தி இஸ்மாயில்  மென்க்  5 நாட்கள்  இலங்கையில் தங்கியிருப்பாா்.  இவா் உலகின் சிறந்தவா்களில்  500 வது இடத்தினை பெற்றவா், சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவா் , உலக நாடுகளில்  இஸ்லாம், மற்றும் பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி கோடிக்கணக்கான மக்களை கவர்ந்தவா்.  இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தெஹிவளை ,மற்றும் ஜாவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பள்ளிவாசல்களில் உரையாற்றவுள்ளாா். 

  நேற்று (7) இரவு வெள்ளவத்தை மெரைவ்  ஹோட்டலில் அவா் எழுதிய ஆங்கில மொழியிலான "Motivational Moments நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது.  இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தலைவரும்  தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளா்  சட்டத்தரணி  சுதா்சன குணவர்த்தன் கலந்து கொண்டாா்.  

நுாலின் முதற்பிரதி இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி  பொதுபலசேன ஸ்தாபகா் நிலந்த விதானகே  மற்றும் ஊடக நிறுவனங்களின் தாலவா்கள் பிரதம ஆசிரியா்களுக்கும் இவரது நுால்கள் வழங்கிவைக்கப்பட்டது. 
6/grid1/Political
To Top