தற்போதையை அரசின் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும்

NEWS


கடந்த அரசாங்கத்தின் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பாக தற்போதைய அரசாங்கத்தின் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மோசடி செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் முதலில் நடப்பு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த முன்னுதாரணத்தை தாமே அறிமுகப்படுத்தியதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
6/grid1/Political
To Top