அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா: இறுதி முடிவை எடுக்க தயாராகும் சுதந்திரக் கட்சி

NEWS
0
Image result for சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலும் மறுசீரமைப்புடன், கட்சியின் கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

17ஆம் திகதியின் பின் கட்சியுடன் கலந்துரையாடல்களை நடத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முனைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top