அல்ஹுதா பாடசாலை கட்டிட திறப்பு விழா

Ceylon Muslim
Najeeb Deen Foundation அமைப்பின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாசிகசாலை மற்றும் கணணி அலகுப் பிரிவுடன் கூடிய கட்டிட திறப்புவிழா கடந்த 2018.09.30 அன்று ஹொரகொட அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அல்ஹுதா முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் M.N.M. நிஸ்தார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக Najeeb Deen Foundation தலைவர் (இயக்குனர்) தேசமான்ய நஜீப்தீன் அவர்களும்விசேட அதிதியாக தென் மாகாண தமிழ் மொழி கல்விப்பணிப்பாளர் மதனியா கலீல் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் அதிதிகளாக ஒய்வு பெற்ற முன்னால் அதிபர் ஜெய்ன்லாப்தீன் மற்றும் ஒய்வு பெற்ற முன்னால் ஆசிரியர் அல்ஹாஜ் M.H.M மஷூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



மேலும் இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்சிகளும் அரங்கேறியது. இவ்விழாவில் Najeeb Deen Fountainஅங்கத்தவர்கள் மற்றும் பாடசலை மாணவர்கள் பெற்றோர் உட்பட ஊர் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
6/grid1/Political
To Top