வஷீம் தாஜூடீன் படுகொலை ; விசாரணை செய்த புலனாய்வு உயர் அதிகாரிக்கு இடமாற்ற முயற்சி!

Ceylon Muslim
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த இடமாற்றமானது நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கே இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top