முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தி!

Ceylon Muslim
அராஜகத்துக்குப் பதிலாக உண்மையான ஜனநாயகத்தின் மகிமையை உலகத்துக்கு எடுத்துக்காட்டியவராக இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

உள்நாட்டிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் அடாவடித்தனங்கள் அதிகரித்து, சர்வாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகின்ற இக்கால கட்டத்தில், பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறியாமை மிகைத்திருந்தபோது அராபிய தீபகற்பத்தில் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் நல்லாட்சியை நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தோற்றுவித்தைப் பற்றி நாங்கள் சிந்திப்பது சாலச் சிறந்ததாகும்.

சன்மார்க்க விழுமியங்களுக்கு மதிப்பளித்து, அல்-குர்ஆனின் போதனைகள் மற்றும் நபி பெருமானாரின் வழிமுறைகள் என்பவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதிலேயே எங்களது ஈருலக விமோசனமும் தங்கியிருக்கிறது.


(ஊடகப் பிரிவு)
6/grid1/Political
To Top