மகிந்தவை நீக்க ஆதாரம் காட்டுங்கள் - மைத்திரி ஆவேசம்

NEWS
0 minute read

நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கான ஆதாரம் எங்கே என நேற்றைய தினம் அனைத்து கட்சி மாநாட்டில் வைத்து கேள்வியெழுப்பியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அதனடிப்படையில் ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததையடுத்தே இவ்வாறு கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. 
 
ஊடகங்கள் ஊடாக உலகமே இதை அவதானித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப் பட்ட போதிலும் ஹன்சார்டில் அவ்வாறு எதுவும் பதிவாக வில்லையென உதய கம்மன்பில தெரிவித்திருந்ததோடு குறிப்பிட்ட தினங்களின் ஹன்சார்டும் சபையில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முறைப்படி ஹன்சார்டில் பதியப்படாதமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
To Top