இலங்கை ஜனநாயக நாடா என்பதில் சந்தேக ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்காத காரணத்தினால் தான் இன்று அமைதியான முறையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடகம் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.