இலங்கையிலுள்ள அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை புதிய நியமனங்களை வழங்க வேண்டாமென ஜனாதிபதியின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஆனாலும் அவசர தேவை இருக்குமாயின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி செயலர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
