ரணிலுக்கு நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவு இல்லவே இல்லை

NEWS
0 minute read

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் 113 பேரின் ஆதரவு இல்லவே இல்லையென தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.

தமக்கான வாய்ப்பும் தேவையும் வரும் போது தமது தரப்பு நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் எனவும் தெரிவிக்கின்ற அவர், முறைப்படி ஐந்து நாட்கள் காத்திருந்து நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர ரணில் விக்கிரமசிங்க தயங்குவது இதன் காரணத்தினாலேயே என தெரிவிக்கின்ற அவர், ரணிலுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிவிக்கிறார்.

இன்றைய தினம் மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், சபை அமர்வுகள் மீண்டும் குழப்ப நிலையை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணையைத் தவிர்த்து வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்கே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
To Top