பிரதமர், அமைச்சரவைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

NEWS
0 minute read
சிலோன் முஸ்லிம் செய்தியாளர், நீதிமன்ற வளாகத்திலிருந்து....


பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையென நீதிமன்றம் சற்றுமுன் இடைக்கால தடைவிதித்துள்ளது. 


ஐக்கிய தேசிய கட்சியினால் மகிந்த அரசுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமை பேராண்மை மனு இன்று  சற்றுமுன் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கிவைக்கப்பட்டது . 

குறித்த தீர்ப்பில்; 

“உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 49 பேருக்கு இடைநிறுத்தம் செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன்.  பிரதமர் அலுவலகத்தினை மகிந்த ராஜபக்‌ஷ எந்த முறையில் பாவிக்க முடியும் எனவும் நீதிமன்றினால் கேள்வி எழுப்பியது”


தொடர்ந்தும் குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் டிசம்பர் 12ஆம் விசாரிக்கப்படும். 
To Top