அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே நாளை (09) வழங்கப்படவுள்ளது.

NEWS


தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை (09) வழங்கப்படவுள்ளது. 

புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
6/grid1/Political
To Top