கைது செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், மற்றும் செயலாளா் ஆகியோரை விடுவிக்க சுமந்திரன் , மாவை சேனாதிராஜா ஆகிய எம்பிமாரும் முன்னாள் மாகாண அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார் .
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.