ரமழான் நோன்பு காலப்பகுதியில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம் மலிக் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என சகல பள்ளிவாசல்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.