Headlines
Loading...
போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட மூவர் கைது


முல்லேரியா-கல்வான பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாளின் ஒரு பக்கத்தை மாத்திரம் அச்சிட்டுள்ளதுடன், அச்சிட்ட பக்கம் மாத்திரம் தெரியும் வண்ணம் மேலும் பல நாணயத்தாள்களை ஒன்றின் மீது ஒன்றாக சுமார் 128 கட்டுகளாக பிரித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34,36 மற்றும் 42 வயதுடைய ஜா-எல, அங்கொடை மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.

0 Comments: