Headlines
Loading...
மொட்டுக்கட்சியின் சிலர் இராஜினாமா செய்ய முடிவு? உண்மை வெளியானது.

மொட்டுக்கட்சியின் சிலர் இராஜினாமா செய்ய முடிவு? உண்மை வெளியானது.



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காத பிரபல உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண முதலமைச்சராக பதவி பெறுவதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புதிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிய பிரபல அரசியல்வாதிகளான சுசில் பிரேமஜயந்த, அநுரபிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சான் விஜேலால், சந்திம வீரக்கொடி ஆகியோர் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை முன்னாள் எம்.பி டிலான் பெரேராவும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Comments: