Headlines
Loading...
மூன்று மாத குழந்தையை விற்று மொபைல் போன் வாங்கிய பெற்றோர்!

மூன்று மாத குழந்தையை விற்று மொபைல் போன் வாங்கிய பெற்றோர்!


சொந்த மூன்று மாத குழந்தையை இலங்கை நாணயப்படி, ரூபா. 2.5 லட்சத்துக்கு விற்று பைக் மற்றும் மொபைல் போன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பெங்களூரை சேர்ந்த தம்பதியருக்கு கடந்த 03 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விரும்பாத தந்தை அப்போதே குழந்தையை விற்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அவரது எண்ணம் கைகூடாமல் போனநிலையில் வீடு திரும்பிய பிறகு, அவரது எண்ணத்தை அறிந்த நபர் ஒருவரின் உதவியுடன் மூன்று மாத குழந்தையை அருகில் இருந்த கிராமத்தில் உள்ள தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்றுள்ளனர்.

கிடைத்த பணத்தில் சுமார் ரூ.35,000க்கு மொபைல் போனும், ரூ.125,000க்கு பைக்கும் வாங்கியுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

குழந்தையை காணாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள குழந்தையின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் தனது கணவரின் அச்சுறுத்தலால்தான் குழந்தையை விற்க ஒப்புக் கொண்டதாகவும், குழந்தையை தன்னிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#இர்பான் ரிஸ்வான்

0 Comments: