Headlines
Loading...
   ஆசிரியர் - அதிபர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிவித்தல்

ஆசிரியர் - அதிபர் சங்கத்தினர் விடுத்துள்ள அறிவித்தல்



அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிரிக்கப்படவேண்டும் என, ஆசிரியர் – அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சம்மேளனம் எச்சரித்துள்ளது.

அத்துடன், சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லையென இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments: