வெளிவந்தது புதிய சுகாதார வழிகாட்டி
January 01, 2022
0
இன்று(01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையிலான புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஐந்தாம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவ கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2022ஆம் ஆண்டில், நாட்டில் முடக்க நிலையை அமுலாக்காமல் இருப்பதற்கும், வழமைபோல இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கும், அனைத்துப் பிரஜைகளும் சுகாதார வழிகாட்டல்களை கடுமையாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேற்படி சுகாதார வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
Share to other apps