Headlines
Loading...
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் – ஜோன்ஸ்டன்!

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் – ஜோன்ஸ்டன்!





அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாட்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால், ஜனாதிபதி மீது அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறினார்.

இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதாக ஜனாதிபதி விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளது என சுட்டிக்காட்டினார்.


இதனால் விரக்தி அடைந்த அவர்கள் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் என கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜனாதிபதியை தொடர்ந்தும் பாதுகாப்போம் என்றும் குறிப்பிட்டார்.


இதேவேளை அரசியல் இலாபத்திற்காக அப்பாவிமக்களை கொலை செய்தவர்கள் சிலர் இன்னும் ஜனநாயகத்தின் வெற்றியாளர்களாக மாறுவேடமிட்டு உயிருடன் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments: