களுகங்கையில் நீராடச் சென்ற நிலையில், அள்ளுண்டு செல்லப்பட்ட நால்வருள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
22 மற்றும் 40 வயதுடைய இருவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சிரிபாகம ஸ்ரீ பலாபத்தல பிரதேசத்தில் நேற்று (15) பகல் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் காணாமல் போன இருவருள் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், 10 வயதான சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.