Headlines
Loading...
 பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து!

பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து!





பொரளை - கித்துள்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு கொழும்பு மாநகரசபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்திருந்தன.

இதனையடுத்து, தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 Comments: