பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாடு!

ADMIN
0
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜய ஸ்ரீ மஹாபோதியில் இன்று (10) வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

முதலில் பிரதமர், அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறி நிவாச தலைமை தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்தார்.
ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரை சந்தித்தார்.

அங்கு பிரதமர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரின் நலன் விசாரித்து கலந்துரையாடினார்.

இவ்வழிபாட்டு நிகழ்வில் பிரதமருடன் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top