இந்திய - இலங்கை இராணுவத்தினரிடையிலான 9ஆவது இராணுவ மட்டப் பேச்சுக்கள் புனேயில் இடம்பெறுகின்றன.
இதில் இலங்கை இராணுவத்தின் ஐந்து பேர்கொண்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் குறித்து இப்பேச்சுக்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.