Headlines
Loading...
   கைக்குண்டு விவகாரம்; வைத்தியருக்கு விளக்கமறியல்

கைக்குண்டு விவகாரம்; வைத்தியருக்கு விளக்கமறியல்




பொரளையில் உள்ள தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான ஓய்வு பெற்ற வைத்தியரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று(14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


0 Comments: