பிரதமரின் யாழ் விஜயத்தில் அமைச்சர் டக்ளஸுக்கு கொரோனா
March 19, 2022
0
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் (19) நயினாதீவுக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமருடனான அமைச்சரின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நாகவிகாரை விஜயத்தின் போது அமைச்சர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(யாழ்ப்பாணம் நிருபர்கள் சுமித்தி தங்கராசா, மயூரப்பிரியன்)
Share to other apps