Headlines
Loading...
   ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுலாகும்

ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுலாகும்


இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (27) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரையிலான பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், பி முதல் டபிள்யூ வரையிலான பிரிவுகளில் மாலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.



0 Comments: