Headlines
Loading...
கஞ்சிபான இம்ரான் அதிரடியாக கைது!

கஞ்சிபான இம்ரான் அதிரடியாக கைது!


கிளப் வசந்தவின் கொலையின் மூளையாகக் கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபான இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிபான இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லொக்கு பெட்டி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபான இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும்  துபாயில் மறைந்துள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பெட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஆதாரங்களின்படி, பிரான்ஸில் பதுங்கியிருந்த கஞ்சிபான இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரெஞ்சு எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கிளப் வசந்தவை கொலை செய்ய பாதாள உலக குழு தலைவர் கஞ்சிபான இம்ரான் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் செலவு செய்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments: