Headlines
Loading...
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் மூல வக்களிப்பு இன்று

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; தபால் மூல வக்களிப்பு இன்று

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இன்று(14) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய தினம்(14) வாக்களிக்க வாய்ப்பு கிடைக்காத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி தமது சேவை நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிப்பதற்கான விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளும் 1 சுயேட்சை குழுவும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

0 Comments: