பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக அவர் 9 மாத சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோதே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது,
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த பின்னர், தன்னை பிணையில் விடுவிக்கக் கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.