News
புதிய காத்தான்குடியில் 9 வயது மாணவி காய்ச்சலினால் மரணம்; மக்கள் அவதானமாக இருக்கவும்
புவி றஹ்மதுல்லாஹ்
புதிய காத்தான்குடி 6ம் குறிச்சி, நூறானியா மையவாடி வீதியைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஐ.எல்.எம். ஜிம்ஸார் என்பவரின் 3வது மகளும், மட்/மம/நூறானியா வித்தயாலயத்தில் ஆண்டு 3 இல் கல்வி கற்று வந்தவருமான எம்.ஜே. பாத்திமா ஹஸீதா (வயது 09) எனும் மாணவி காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நேற்று காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
இரண்டு தினங்களுக்கு முன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இம்மாணவி காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்தார்.
அன்னாரின் ஜனாஸா தற்போது வைத்தியசாலையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
உயர்ந்தோன் அழ்ழாஹ், இம்மாணவியை அவனது சுவனத்தில் சேர்த்தருள்வானாக! அவரது பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், உடன்பிறப்புக்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் அனைவருக்கும் ஆறுதலளிப்பானாக!!