Headlines
Loading...
9 வயது பாடசாலை மாணவி பாத்திமா ஹஸீதாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

9 வயது பாடசாலை மாணவி பாத்திமா ஹஸீதாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது


புவி றஹ்மதுல்லாஹ்

புதிய காத்தான்குடி நூறானியா மையவாடி வீதியைச் சேர்ந்த 3ஆம் ஆண்டு பாடசாலை மாணவி எம். ஜே. பாத்திமா ஹஸீதாவின் ஜனாஸா தொழுகை இன்று காலை 10:15 மணிக்கு புதிய காத்தான்குடி நூறானியா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜனாஸா தொழுகையை நிறவேற்றிய பின் அப்பள்ளிவாசலுக்குரிய மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஜனாஸா தொழுகையிலும், நல்லடக்கத்திலும் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர்.