News
முஸ்லிம் விவாக சட்ட சீர்திருத்த சட்டம்; நாளை கூடுறது சலீம் மர்சூப் நீதியரசர் குழு
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழு எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி, தயாரிக்கப்பட்டுள்ள சிபார்சுகள் தொடர்பான அறிக்கையை ஆராயவுள்ளது.
சிபார்சுகள் தொடர்பாக குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளும், கருத்துகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்பே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொறகொடவினால் இந்தக்குழு நியமிக்கப்பட்டது.
இதில் 18 பேர் அங்கம் வகிக்கின்றனர். உலமா சபையின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், புத்திஜீவிகள் இதில் அடங்குகின்றனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் சட்டத்தரணி சிப்லி அஸீஸ், நீதிபதிஏ.டப்ளியு.ஏ.சலாம் ஆகியோர் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருப்பதால் சமுகமளிக்க முடியாது என அறிவித்துள்ளதுடன் குழு எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.