ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உயர் மட்ட தலைவர்களின் ஒருவரான அப்துல்லா ஹசிப் (Abdul uasib) கொல்லப்பட்டுள்ளார். ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரப் காலியின் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கார்ஹார் மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் சிறப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே அவர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபுலில் கடந்த மார்ச் மாதம் இராணுவ மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அப்துல்லா ஹசிப்பே (Abdul uasib) பிரதானமாக செயப்பட்டுள்ளார். அந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.