News
லண்டன் இரயில் நிலையத்தில் இளைஞரை கத்தியால் குத்திய மர்ம நபர்: பொலிசார் விசாரணை
லண்டனில் உள்ள இரயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இளைஞரை கத்தியை வைத்து குத்திவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் Upney இரயில் நிலையத்தில் பொதுமக்கள் பலரும் இரயிலுக்காக காத்திருந்தனர். ஒரு சிலர் இரயில் நிலையத்தின் வெளியில் உள்ள நடைபாதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் 18-வயது இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி தப்பியுள்ளார்.
இதனால் பாதிப்புக்குள்ளான இளைஞர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக இரயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக Upney இரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், இரயில்கள் குறித்த இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன. மேலும் அப்பகுதியை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.