கம்பளையில் இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட விவகாரத்துடன் காத்தான்குடி பகுதியில் செயற்பட்டதாக நம்பப்படும் 'ராசிக் குறூப்' எனும் குழுவின் உறுப்பினர்கள் சிலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையில் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் ராசிக் குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை இதுவரை கைது செய்துள்ளனர்.
பாலமுனையைச் சேர்ந்த மொஹம்மட் ராசிக், காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மத் றியான் ஆகிய ராசிக் குறூப்பின் முன்னாள் உருப்பினர்களும் 30 வயதுடைய பாலமுனையைச் சேர்ந்த ஜுனைத் சர்ஜூன், 29 வயதான பூநொச்சிமுனையைச் சேர்ந்த மொஹம்மத் ரிபான் ஆகியோரே இவ்வாறு புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.